ஏடிபி சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் ராம்குமார்

டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஏடிபி சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் ராம்குமார்

டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் டலஹாஸீ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ராம்குமார் தனது அரையிறுதியில் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தகுதி நிலை வீரரான ஆண்ட்ரியா அர்னாபோல்டியை தோற்கடித்தார்.
ஏடிபி சேலஞ்சர் போட்டியில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ராம்குமார், அடுத்ததாக ஸ்லோவேனியாவின் பிளாஷ் ரோலாவுடன் மோதுகிறார். பிளாஷ் ரோலா தனது அரையிறுதியில் 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மிட்செல் குரூகெரை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-1, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஈகுவடாரின் ராபர்ட்டோ கிரோஸ்-கொன்ஸாலோ எஸ்கோபார் ஜோடியைத் தோற்கடித்தது. பயஸ்-லிப்ஸ்கி ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயர்-மேக்ஸிமோ கொன்ஸாலெஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com