பார்சிலோனா ஓபன்: இறுதிச் சுற்றில் நடால், டொமினிக் தீம்: ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கும் நடால்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கும் நடால்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் நடால் வெல்லும்பட்சத்தில், பார்சிலோனா ஓபனில் அவர் வென்ற 10-ஆவது பட்டமாக இது அமையும்.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான முர்ரே 2-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதியின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் டொமினிக் தீம் கைப்பற்ற, அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் முர்ரே கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டின் ஆரம்பத்தில் தனது சர்வீஸை முர்ரேவிடம் இழந்த டொமினிக் தீம், பின்னர் சரிவிலிருந்து மீண்டார். அவர், தொடர்ந்து அபாரமாக ஆட, முர்ரேவுக்கு நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டொமினிக் தீம், முர்ரேவின் மூன்று சர்வீஸ்களை முறியடித்து 6-4 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார். முர்ரேவுக்கு எதிராக டொமினிக் தீம் பெற்ற முதல் வெற்றி இது. தோல்வி குறித்துப் பேசிய முர்ரே, 'இது சவால் மிக்க ஆட்டம்' என்றார்.
நடால் வெற்றி: மற்றொரு அரையிறுதியில் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஹொராஸியோ ùஸபல்லோஸை தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com