டிஎன்பிஎல்: காரைக்குடி அணிக்கு 2-ஆவது வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது காரைக்குடி அணி.
திண்டுக்கலில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதுர்வேதி 31 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45, அபராஜித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தனர். காரைக்குடி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய காரைக்குடி அணியில் விஷால் வைத்யா-அனிருத்தா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது. விஷால் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் பத்ரிநாத் 11 ரன்களில் நடையைக் கட்ட, ஷாஜன் களம்புகுந்தார். அந்த அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தபோது அனிருத்தா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன்பிறகு அந்த அணி சரிவுக்குள்ளாகவே, மீண்டும் களம்புகுந்த அனிருத்தா 34 பந்துகளில் அரை சதம் கண்டதோடு, காரைக்குடி அணிக்கு வெற்றியும் தேடித்தந்தார்.
அந்த அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அனிருத்தா 35 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
திருவள்ளூர் அணி தரப்பில் அபிஷேக் தன்வார், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com