ஏடிபி சேலஞ்சர்: 2-ஆவது சுற்றில் விஷ்ணு வர்தன்

சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏடிபி சேலஞ்சர்: 2-ஆவது சுற்றில் விஷ்ணு வர்தன்

சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தைபேவின் டி சென்-ஐ எதிர்கொண்ட விஷ்ணு வர்தன், 7-6(3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவர் தனது 2-ஆவது சுற்றில் சீனாவின் வைல்டு கார்டு சுற்று வீரரான ஜிஜென் ஜாங்கை சந்திக்கிறார்.
இதனிடையே, இப்போட்டியில் பங்கேற்ற சாகேத் மைனேனி உள்ளிட்ட இதர இந்திய வீரர்கள் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர். இதில் மைனேனி ரஷியாவின் எவ்ஜெனி டான்ஸ்காயிடம் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். சசிகுமார் முகுந்த் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்ஸாண்டர் குட்ரியாத்செவிடம் தோல்வி கண்டார்.
ஸ்ரீராம் பாலாஜி 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோ சோடாவிடம் வீழ்ந்தார். சித்தார்த் ராவத் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சூன் வூ குவோனிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/விஷ்ணு வர்தன் ஜோடி, சாகேத் மைனேனி/பிரசாந்த் ஜோடியை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் சித்தார்த் ராவத்/சசிகுமார் முகுந்த் ஜோடி 1-6, 2-6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மியோமிர் கெச்மானோவிச்/ஸ்பெயினின் மேரியோ மார்டினெஸ் இணையிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com