செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

* இலங்கைக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வரும் 13-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. அதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும் என தெரிகிறது.
* அடிடாஸ்-எம்சிசி தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி வரும் 14-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இரு பாலருக்கான இந்தப் போட்டியில் 136 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 240 பேர் பங்கேற்கின்றனர்.
* தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கோவை கிங்ஸ்-மதுரை சூப்பர்ஜயன்ட் அணிகள் இடையிலான ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
* சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்துக்கு எதிராக நிறவெறி தொடர்பான கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் முகுந்ந் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார்.
* கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை கேரள உயர் நீதிமன்றம் நீக்கிய நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com