சர்வதேச செஸ்: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன்
சர்வதேச செஸ்: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது சுற்றில் ஆனந்த், மேக்ஸைம் வச்சியருடன் டிரா செய்தார். லெவோன் ஆரோனியன், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லருடன் டிரா செய்தார்.
மற்றொரு ரஷிய வீரரான செர்ஜி கர்ஜாகின், அமெரிக்காவின் வெஸ்லே சோவை வீழ்த்தினார். அதேநேரத்தில் ரஷியாவின் நெபோம் நியாக்ஷி-நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர்கள் பாபியானோ கருணா-ஹிகாரு நாகமுரா ஆகியோர் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ளது.
மேக்னஸ் கார்ல்சன், செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், பாபியானோ கருணா 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும் உள்ளனர். பீட்டர் ஸ்விட்லர் 3.5 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், இயான் நெபோம்நியாக்ஷி, ஹிகாரு நாகமுரா ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், வெஸ்லே சோ 2.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com