சர்வதேச செஸ்: ஆனந்துக்கு 2-ஆவது இடம்

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு 2-ஆவது இடம் கிடைத்தது.

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு 2-ஆவது இடம் கிடைத்தது.

இந்தப் போட்டியின் 8-ஆவது சுற்று வரை முன்னிலையில் இருந்த ஆனந்த், 9-ஆவது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லே சோவுடன் டிரா செய்ததால், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது மற்றும் கடைசிச் சுற்றில் பிரான்ஸின் மேக்ûஸம் வச்சியர், ரஷியாவின் நெபோம் நியாக்ஷியை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் 6 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார்.
நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனையும், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர், அமெரிக்காவின் பாபியானோ கருணாவையும் வீழ்த்தினர். அதேநேரத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா-ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
9 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2 வெற்றி, 7 டிராக்களுடன் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இதனால் அவர், கார்ல்சனுடன் (5.5 புள்ளிகள்) 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். லெவோன் ஆரோனியன், செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
பீட்டர் ஸ்விட்லர் 4.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தையும், பாபியானோ கருணா 4 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தையும், ஹிகாரு நாகமுரா 3.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தையும் பிடித்தனர். வெஸ்லோ சோ, நெபோம் நியாக்ஷி ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com