துணை கேப்டன் பதவி: எனக்கு கிடைத்த கெளரவம்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
துணை கேப்டன் பதவி: எனக்கு கிடைத்த கெளரவம்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அவர் மேலும் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது துணை கேப்டனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக இருந்தாலும், சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பது முற்றிலும் வித்தியாசமானதாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com