பந்துவீச கூடுதல் நேரம்: மே.இ. அணி கேப்டன் ஹோல்டருக்குத் தடை!

பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு...
பந்துவீச கூடுதல் நேரம்: மே.இ. அணி கேப்டன் ஹோல்டருக்குத் தடை!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் மே.இ. அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து ஹோல்டருக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மே.இ. வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வரும் 9-ம் தேதி அன்று ஹேமில்டனில் தொடங்கவுள்ள 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஹோல்டர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com