தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அஞ்சும் முட்கில்

தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தனிநபர் மற்றும் குழு பிரிவில் சனிக்கிழமை 2 தங்கம் வென்றார் அஞ்சும் முட்கில்.

தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தனிநபர் மற்றும் குழு பிரிவில் சனிக்கிழமை 2 தங்கம் வென்றார் அஞ்சும் முட்கில்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவரும் 61-ஆவது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் பஞ்சாப் சார்பில் களம் கண்ட அஞ்சும் முட்கில், 457.6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். எட்டு வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை ஸ்ரேயா சக்சேனா 452.9 புள்ளிகள் பெற்று வெள்ளியும், ராணுவம் சார்பில் போட்டியிட்ட ராஜ் சௌதரி 439.5 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.
குழு பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் 1730 புள்ளிகளுடன், அஞ்சும் முட்கில் பங்கேற்றிருந்த பஞ்சாப் தங்கம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com