தேசிய துப்பாக்கி சுடுதல்: 5 தங்கம் வென்றார் அஞ்சும்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றார்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றார். மேலும், இப்போட்டியின் அணிகளுக்கான பிரிவிலும் அவர் தங்கம் வென்றார்.
இதையடுத்து, இப்போட்டியில் இதுவரை அவர் வென்ற 3 தங்கத்தையும் சேர்த்து, அவரது மொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 5-ஆகியுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 457.6 புள்ளிகளுடன் அஞ்சும் முட்கில் முதலிடம் பிடித்தார். இப்பிரிவில் ஜம்மு காஷ்மீரின் ஷ்ரேயா சக்úஸனா 452.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ராணுவ வீராங்கனையான ராஜ் செளதரி 439.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனர்.
இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிகளுக்கான பிரிவில் அஞ்சும் முட்கில், தில்ரீன் கில், அவ்னிஷ் கெளர் சித்து ஆகியோர் அடங்கிய பஞ்சாப் அணி 1730 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது. மகாராஷ்டிரம் 1714 புள்ளிகளுடன் வெள்ளியும், கேரளம் 1711 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com