ஆசிய ரக்பி: இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
லாவ்ஸ் தலைநகர் வியன்டியான் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா, பிலிப்பின்ஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், லாவ்ஸ் என மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன.
ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 22-7 என்ற புள்ளிகள் கணக்கில் லாவ்ஸ் அணியையும், 12-5 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப்பின்ஸ் அணியையும், 43-0 என்ற கணக்கில் நேபாளத்தையும், 26-12 என்ற கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்தது.
2-ஆவது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 0-29 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோற்றது. இதனால் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com