ஐ.பி.எல்: புனே அணித்தலைவர் பொறுப்பிலிருந்து தோனி நீக்கம்! 

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி அதிரடியாக நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல்: புனே அணித்தலைவர் பொறுப்பிலிருந்து தோனி நீக்கம்! 

புதுதில்லி: ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி அதிரடியாக நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் எழுந்த 'மேட்ச் பிக்சிங்' புகார்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த பெரும்பாலான வீரர்கள், கடந்த ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, புனே அணி நிர்வாகம் 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். ஆனால் தோனி தலைமையிலான புனே அணி கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்க ப் படுவதாக அணி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் வருகின்ற தொடரில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com