சையது முஷ்டாக் அலி தேசிய டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தியது கிழக்கு மண்டலம்.
இதன்மூலம் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகளுடன் கோப்பையைக் கைப்பற்றியது கிழக்கு மண்டலம்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு மண்டல அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக்சன் 52, பட் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தனர்.
கிழக்கு மண்டலம் தரப்பில் பி.எல்.தாஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் பேட் செய்த கிழக்கு மண்டல அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் விராட் சிங் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், ஜக்கி 30 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் எடுத்தனர்.
மேற்கு மண்டலம் தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 2 விக்கெட் வீழ்த்தினார்.