யு-17 கால்பந்து: இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் லூயிஸ் நோர்டான்

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த லூயிஸ் நோர்டான் டி மத்தோஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த லூயிஸ் நோர்டான் டி மத்தோஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

63 வயதான நோர்டான், போர்ச்சுகல் அணியின் முன்னாள் வீரர் ஆவார். அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பென்பிகா அணி, கினியா பிஸாவ் தேசிய அணி ஆகியவற்றுக்குப் பயிற்சியளித்துள்ளார்.
அவர் தனது ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகளை அடுத்த வாரம் சந்திப்பார் என தெரிகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நிகோலய் ஆடம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது. 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com