மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் 2-ஆவது சுற்றில் ஹர்ஷீல், பிரதுல்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் ஹர்ஷீல் தனி, பிரதுல் ஜோஷி, ஹேமந்த் எம். கௌடா ஆகியோர் முன்னேறினர்.

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் ஹர்ஷீல் தனி, பிரதுல் ஜோஷி, ஹேமந்த் எம். கௌடா ஆகியோர் முன்னேறினர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி மலேசியாவின் சாராவாக் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 20 வயது இளம் வீரர் ஹர்ஷீல் தனி, உள்ளூர் வீரரான ஜி ஜியா லீயை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஹர்ஷீல் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் ஜி ஜியா லீயை தோற்கடித்தார். இப்போட்டி அரை மணி நேரத்தில் முடிவடைந்தது.
மற்றொரு இந்திய வீரரான பிரதுல் ஜோஷி, சிங்கப்பூரின் ஜின் ரெய் ரியானை 15-21, 21-16, 24-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோல், ஹேமந்த் எம். கௌடா, தனது ஆட்டத்தில் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் யெஹிஷ்கீல் பிரிட்ஸை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதர இந்திய வீரர்களான சிரில் வெர்மா, அபிஷேக் எலீகர், ராகுல் யாதவ் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியுடன் வெளியேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com