யு-17 கால்பந்துப் போட்டி ஈரானிடம் இந்தியா தோல்வி

ரஷியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டித் தொடரில் இந்திய அணி, ஈரானிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ரஷியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டித் தொடரில் இந்திய அணி, ஈரானிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
சர்வதேச அளவில் 17 வயதுக்குள்பட்டோருக்கான கிரனாட்கின் கால்பந்துப் போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு 4 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய வீரர்கள் இவற்றை கோலாக்க தவறிவிட்டனர். 40-ஆவது நிமிடத்தில் ஈரான் அணி முதல் கோலை பதிவு செய்தது. இந்திய வீரர்களின் கோல் முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. இதனால், 0-1 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி வெற்றி பெற்றது. வரும் 20-ஆம் தேதி இந்திய அணி தஜிகிஸ்தானுடன் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com