இங்கிலாந்து அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ஆட்டத்தை தாமதப்படுத்தியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ஆட்டத்தை தாமதப்படுத்தியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டாக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணியினர், பந்துவீசுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை கடந்து ஒவர்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்து வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதமும், அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ஊதியத்தில் 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com