இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர், ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத் தலைவராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மூத்த துணைத் தலைவராக வீரேந்தர் கன்வாரும், பொதுச் செயலராக ராஜேஷ் பண்டாரியும் தேர்வு செய்யப்பட்டனர். பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில், லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதற்காக பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செயலராக இருந்த அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் அண்மையில் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.