இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பதிலாக பர்வீஸ் ரசூல், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சீனியர் தேர்வுக் குழுவும், இந்திய அணி நிர்வாகமும் கலந்தாலோசித்த பிறகு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிப்பது என முடிவெடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 26-ஆம் தேதி கான்பூரிலும், 2-ஆவது ஆட்டம் 29-ஆம் தேதி நாகபுரியிலும், 3-ஆவது ஆட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறுகின்றன.
அணி விவரம்: கே.எல்.ராகுல், மன்தீப் சிங், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், யுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com