மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நாடல் ஆகிய இருவரும் மோதினர்.
பரபரப்பாக ஐந்து செட்டுகள் வரை நடந்த இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் பெடரர் ஸ்பெயினின் நடாலைத் தோற்கடித்தார்.
பெடரர் வெல்லும் 18 -ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 5-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.