இலங்கை டெஸ்ட் தொடர்: ஷிகர் தவன் உள்ளே; முரளி விஜய் வெளியே! 

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார்...
இலங்கை டெஸ்ட் தொடர்: ஷிகர் தவன் உள்ளே; முரளி விஜய் வெளியே! 

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். இதையடுத்து ஷிகர் தவனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், கேஎல் ராகுல், முகுந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முழு உடற்தகுதி அடையாததால் முரளி விஜய் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அணியில் ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார். 

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com