அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் காஷ்யப், பிரணாய்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் காஷ்யப் 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான சமீர் வர்மாவைத் தோற்கடித்தார்.
கடந்த 7 மாதங்களில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் காஷ்யப், அடுத்ததாக தென் கொரியாவின் வாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரணாய் 10-21, 21-15, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கன்டா சுனேயமாவைத் தோற்கடித்தார். பிரணாய் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் வியத்நாமின் டியென் நுயெனுடன் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோக்கி ஒகாமுரா-மஸாயூக்கி ஓனோடெரா ஜோடியைத் தோற்கடித்தது. இந்திய ஜோடி தங்களின் அரையிறுதியில் சீன தைபேவின் லூ சிங் யாவ்-யங் போ ஹன் ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com