இந்திய கிரிக்கெட் அணிக்கான மேலாளர் காலிப் பணியிடம் தொடர்பாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து அந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 21-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பதவிக்காக 35 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதிலிருந்து சுமார் 13 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அந்த 13 பேருக்கும் செவ்வாய்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா தலைமையில் நடத்தப்பட்டது. இதிலிருந்து 5 பேரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
இந்த 5 பேரின் விவரங்களும் பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி மற்றும் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கும் அனுப்பப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் புது மேலாளர் புதன்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.