2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கமிட்டி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கூடி விருது பெறுபவர்கள் பட்டியலை இறுதி செய்கிறது. இந்தக் கமிட்டியின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.