சர்வதேச குத்துச்சண்டை: சிவ தாபா, மனோஜுக்கு தங்கம்

செக்.குடியரசில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, மனோஜ் குமார் உள்ளிட்ட 5 பேர் தங்கப் பதக்கம் வென்றனர்.

செக்.குடியரசில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, மனோஜ் குமார் உள்ளிட்ட 5 பேர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சிவ தாபா தனது இறுதிச் சுற்றில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேக்கியாவின் பிலிப் மெஸ்ஸரோûஸ தோற்கடித்தார். 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் செக்.குடியரசின் டேவிட்டை தோற்கடித்து தங்கம் வென்றார். 91 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சதீஷ் குமார் கடும் போராட்டத்துக்குப் பிறகு ஜெர்மனியின் மேக்ஸ் கெல்லரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித்குமார் பாங்கல் தனது இறுதிச் சுற்றில் சகநாட்டவரான கவிந்தர் பிஸ்ட்டை தோற்கடித்து தங்கம் வென்றார். கெளரவ் பிதுரி (56 கிலோ) 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்தின் இவானோவ் ஜெரோஸ்லாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதேநேரத்தில் இந்தியாவின் கவிந்தர் பிஸ்ட், மணீஷ் பன்வார் (81 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், சுமித் சங்வான் (91 கிலோ எடைப் பிரிவு) வெண்கலமும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com