தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடவுள்ளார் யூசுப் பதான்

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் விளையாடவுள்ளார். 
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடவுள்ளார் யூசுப் பதான்

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் விளையாடவுள்ளார். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளார். கெளதம் கம்பீர் ஏதாவதொரு டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் போட்டியினால் இளைஞர்கள் பலர் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். உள்ளூர் திறமைகளுக்கு மிகவும் உதவுகிறது. டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி ஒரு இளைஞரின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. ஆலோசகராகப் பணியாற்ற அணிகளிடம் பேசிவருகிறேன் என்று கூறியுள்ளார். 

தற்போது டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர் யூசுப் பதான் விளையாடவுள்ளார். டிஎன்பிஎல் ஏலத்தில் இடம்பெறக்கூடிய வீரர்களின் பட்டியலில் யூசுப் பதான் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

2012-ம் ஆண்டு இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய யூசுப் பதான், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் பியூஷ் சாவ்லா, அன்கீத் பாவ்னே, ராபின் பிஸ்ட் ஆகியோரும் டிஎன்பிஎல்-லில் பங்கேற்கவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com