மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடிவிட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பூம்ராவும் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருடைய பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பூம்ரா இடம்பெறாததால், முகமது சமிக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். இந்தத் தொடர் வரும் 23-ஆம் தேதி டிரினிடாட் அன்ட் டொபாக்கோவில் தொடங்குகிறது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரிஷப் பந்த், அஜிங்க்ய ரஹானே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ்.