ராகுல் டிராவிடுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவுள்ள பிசிசிஐ!

இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டுக்கு
ராகுல் டிராவிடுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவுள்ள பிசிசிஐ!

இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோருக்கு பிசிசிஐ அதிகாரம் வழங்கியுள்ளது.  

இந்நிலையில் டிராவிடுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கலாம் என சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் பிசிசிஐக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ராகுல் டிராவிட் அடுத்த 2 வருட காலத்துக்கு இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக நீடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com