ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 21-10 21-14 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் யூகி ஷியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
யூகியுடன் கடைசியாக மோதிய மூன்று ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வென்றுள்ளார். இந்தப் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் தொடர்ந்து மூன்று சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ஸ்ரீகாந்த். இதற்கு முன்பு சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். சிங்கப்பூரில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்ரீகாந்த், இந்தோனேசியா போட்டியை வென்று சாம்பியன் ஆனார்.