உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அங்குஷ் தாஹியா தங்கம் வென்றார்.
மங்கோலிய தலைநகர் உலன்பாதரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் அங்குஷ் தாஹியா, தென் கொரியாவின் மான் சோ சோலை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான தேவேந்திரோ சிங் (52 கிலோ) தனது இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் அல்டாம்ஸ் சுகுரோவிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.