மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 183 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 183 ரன்கள் எடுத்துள்ளது.

டெளன்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் முதலில் இருந்தே தடுமாறியது மே.இ. அணி. இதனால் அந்த அணியில் யாரும் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது. ஹேய்லே மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மே.இ. அணி 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் தீப்தி சர்மா, பூணம் யாதவ், கெளர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com