எம்சிடி தேர்தல்: ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றம்

தில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதையொட்டி அங்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது.
தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, டெல்லி டேர்டெவில்ஸ் தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து, மே 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாறாக, மும்பை அணி தனது சொந்த மண்ணில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மும்பை-தில்லி ஆட்டத்தின் மாற்றம் காரணமாக, புணே-ஹைதராபாத் இடையே ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆட்டம், முன்கூட்டியே மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com