டெலாய்ட் தணிக்கை அறிக்கை: மாநில கிரிக்கெட் சங்கங்கள் பதிலளிக்க பிசிசிஐ அறிவுறுத்தல்

மாநில கிரிக்கெட் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தொடர்பான அறிக்கைக்கு 10 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.

மாநில கிரிக்கெட் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தொடர்பான அறிக்கைக்கு 10 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
டெலாய்ட் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த தணிக்கைகள் தொடர்பான அறிக்கை, சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தணிக்கையின் மூலம், ஹைதராபாத், அஸ்ஸாம், கோவா, பரோடா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கங்களில் முறைகேடு நிகழ்ந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில கிரிக்கெட் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் நேரடியாக பிசிசிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அந்த அறிக்கையை தெரிந்துகொண்டால் மட்டுமே முறைகேடுகளை அகற்ற முடியும் என்றும், நிர்வாகத்தை வெளிப்படத்தன்மையுடன் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் பிசிசிஐ நிர்வாகக் குழுவை கேட்டுக்கொண்டதை அடுத்து, டெலாய்ட் தணிக்கை அறிக்கை அவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரோடா கிரிக்கெட் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியது, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் முறைகேடான நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தது போன்றவை டெலாய்ட் தணிக்கை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாகக் குழு கூட்டம்: இதனிடையே, பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில், வீரர்களுடனான ஒப்பந்தம் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான தினப்படி திருத்தம் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com