நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி புரூன் ரன் ஏதுமின்றியும், டீன் எல்கர் 5 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
பின்னர் வந்தவர்களில் டுமினி 20 ரன்களில் வெளியேற, ஆம்லா 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிடவே, முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 33, டெம்பா பெüமா 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி, டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.