சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு நாடுகளுக்கான வருமானப் பகிர்வு முறையில் மாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எடுத்த முடிவின் காரணமாக வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்குமா அல்லது தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய புறக்கணிப்பில் ஈடுபடுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. 

இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, கட்டுப்பட்டு வாரிய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் அணித்தேர்வு மும்பையில் இன்று நடைபெறும் என்றும் பிசிசிஐ செயலர் ராஜீவ் சுக்லா அறிவித்தார். அதன்படி மும்பையில் இன்று நடைபெற்ற தேர்வுக்கு குழு கூட்டத்தின் முடிவில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அணி விபரம் பின்வருமாறு:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்ய ரஹானே, எம்.எஸ்.தோனி, யுவராஜ்,சிங்  கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மொஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் மணீஷ் பாண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com