சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் அபய் சிங், அகான்ஷா

பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் அபய் சிங், அகான்ஷா

பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பிலிப்பின்ஸின் மகாட்டி சிட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அபய் சிங் தனது முதல் சுற்றில் 11-5, 11-8, 11-8 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ரவி தீக்ஷித்தை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அகான்ஷா சலுங்கே 3-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் மலேசியவின் நஜியா ஹனிஸை வீழ்த்தினார். அதேநேரத்தில் இந்தியாவின் சுனைனா குருவில்லா 9-11, 5-11, 11-9, 10-12 என்ற செட் கணக்கில் மலேசியவின் ரச்சேல் அர்னால்டிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com