சாம்பியன்ஸ் டிராபி: மணீஷ் பாண்டே விலகல்; தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து மணீஷ் பாண்டே காயம் காரணமாக விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி: மணீஷ் பாண்டே விலகல்; தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து மணீஷ் பாண்டே காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த மணீஷ் பாண்டே, ஹைதராபாதுக்கு எதிரான வெளியேற்றும் சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்தார்.
2004-இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், இதுவரை 71 ஒரு நாள் ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். 2014-இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கார்த்திக், அதன்பிறகு இப்போதுதான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
2016-17 ரஞ்சி சீசனில் 704 ரன்கள் குவித்ததோடு, விஜய் ஹசாரே டிராபி, தியோதர் டிராபி ஆகியவற்றில் 854 ரன்கள் குவித்தார்.
10-ஆவது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கார்த்திக், 361 ரன்கள் குவித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இப்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார் கார்த்திக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com