கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றியால் நம்பிக்கை பெற்றுள்ளோம்: ரோஹித்

கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றியால் நம்பிக்கை பெற்றுள்ளோம் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றியால் நம்பிக்கை பெற்றுள்ளோம் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா மேலும் கூறியதாவது: இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இந்த ஆட்டத்தில் எங்கள் பௌலர்களால்தான் வெற்றி சாத்தியமானது. அவர்கள் சீரான இடைவேளையில் கொல்கத்தாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். அதுதான் மும்பை அணியின் தனித்தன்மை. எங்கள் அணி எந்தவொரு தனிநபரையும் நம்பியில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com