இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெறும் தமிழக வீரர்கள்!

டெஸ்ட் அணியில் முகுந்த், ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் என சமீபத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெறும் தமிழக வீரர்கள்!

டெஸ்ட் அணியில் முகுந்த், ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் என சமீபத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது.

இன்னும் பலபேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆருடம் சொல்கிறார் தமிழக கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எஸ். ஷரத். அவர் மேலும் கூறியதாவது:

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியில் முதலில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாதது துரதிர்ஷ்டமே. பிறகுதான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவரை முன்பே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். 

அபினவ் முகுந்துக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. பாபா அபரஜித் இந்தியா ஏ அணிக்காக விளையாடியுள்ளார். கெளசிக் காந்தி, இந்திரஜித், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ் ஆகியோரும் இந்திய ஏ அணியில் இடம்பெறுவார்கள் என நம்புகிறேன்.

விஜய் சங்கருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஐபிஎல்-லில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இன்னொரு நல்ல உள்ளூர் போட்டிகளுக்கான சீசன் அமைந்துவிட்டால், அவர் இந்திய அணிக்கான ஆல்ரவுண்டர் போட்டியில் நிச்சயம் இருப்பார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com