நேற்று லண்டனில் இந்திய கிரிக்கெட் அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சி எடுத்துக்கொண்டதன் புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஜூன் 1-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு ஞாயிறு அன்று நடைபெறுகிற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இருநாள்கள் கழித்து வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜூன் 4-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.