மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தை 21-15, 16-21, 21-7என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரணாய் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பிரணாய் முதல்முறையாக வென்றுள்ளார்.