புணே ஓபன்: மைனேனி, பாலாஜி முன்னேற்றம்

புணே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தொடக்க சுற்றில் வெற்றி கண்டனர்.

புணே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தொடக்க சுற்றில் வெற்றி கண்டனர்.
 உடற்தகுதி பிரச்னை காரணமாக இந்த சீசனில் தடுமாறி வந்த மைனேனி, தனக்கு வழங்கப்பட்ட வைல்டு கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிச்சை 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் மைனேனி வென்றார்.
 அதேபோல், பாலாஜி தனது தொடக்க சுற்றில் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எகிப்தின் கரீம் முகமது மாமுனை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
 எனினும், வைல்டு கார்டு வாய்ப்பு பெற்றிருந்த மற்றொரு வீரரான விஷ்ணு வர்தன் 3-6, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் நெடோவ்யேசோவிடம் தோல்வி கண்டார். பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எவான் கிங்கிடமும், விஜய் சுந்தர் 1-6, 2-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோஜோவிடமும் வீழ்ந்தனர்.
 போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சித்தார்த் ராவத் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஆண்டனி எஸ்கோஃபியரிடம் வீழ்ந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com