சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
முன்னதாக, தங்களது முதல் தகுதிச்சுற்றில் சீன தைபேவின் லீ ஜே ஹுவே-வு டி ஜங் ஜோடியை எதிர்கொண்ட சாத்விக்-அஸ்வினி ஜோடி, அதில் 24-22, 21-7 என்ற செட் கணக்கில் வென்றது.
2-ஆவது தகுதிச்சுற்றில் டென்மார்க்கின் நிக்லஸ் நோர்-சாரா திகேசென் ஜோடியை 21-16, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறியது சாத்விக்-அஸ்வினி ஜோடி. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் விறுவிறுப்பாக நீடித்தது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெறவுள்ள பிரதான சுற்றில், டென்மார்க்கின் மதியாஸ் கிறிஸ்டியான்சென்-கிறிஸ்டியானா பெடர்சென் ஜோடியை சாத்விக்-அஸ்வினி இணை எதிர்கொள்ள உள்ளது.