தில்லியில் நடைபெறும் 61-ஆவது தேசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் மானவ்ஜித் சிங், ஷ்ரேயாஸி சிங் ஆகியோர் தங்களது பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
இதில் ஆடவருக்கான டிராப் பிரிவில் மானவ்ஜித் 49 புள்ளிகளுடன் முதலிடமும், அமன் அலி எலாஹி அதே புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், கினான் செனாய் 48 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர். இதில் மானவ்ஜித் சிங் ஓராண்டுக்குப் பிறகு போட்டியில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மொத்தம் 207 பேர் பங்கேற்றனர்.
மகளிர் டிராப் பிரிவில் ஷ்ரேயாஸி சிங் 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சிக்கா பதாவ்ரியா 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், பஞ்சாபின் ராஜேஸ்வரி குமாரி 21 புள்ளிகளுடன் 3-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் மொத்தம் 43 பேர் போட்டியிட்டனர்.