தேசிய மல்யுத்தம் சுஷில், சாக்ஷிக்கு தங்கம்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
தேசிய மல்யுத்தம் சுஷில், சாக்ஷிக்கு தங்கம்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
இதில் ஆடவருக்கான 74 கிலோ பிரிவில் போட்டியிட்ட சுஷில் குமார், தனது முதல் சுற்றில் மிúஸாரத்தின் லால்மல்சாவ்மாவையும், 2-ஆவது சுற்றில் முகுல் மிஸ்ராவையும் வென்றார்.
இந்நிலையில் சுஷிலுடன் காலிறுதியில் மோதிய பிரவீண், அரையிறுதியில் மோதிய சச்சின் தாஹியா ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து விலக, சுஷில் குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதிலும் அவரது போட்டியாளர் விலக, 3 சுற்றிலும் மொத்தமாக 2 நிமிடங்கள், 33 விநாடிகளே போட்டியிட்டு தங்கம் வென்றார் சுஷில்.
இதனிடையே, மகளிருக்கான 59 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ரவிதாவை வீழ்த்தி கீதா போகத் தங்கம் வென்றார். 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் பூஜா தோமரை வென்று தங்கம் தட்டிச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com