ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-ம.பி. ஆட்டம் டிரா

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம்-மத்தியப் பிரதேச அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம்-மத்தியப் பிரதேச அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
 இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மத்திய பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 90.1 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் அங்கித் சர்மா 77 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் விக்னேஷ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய தமிழகம், 105.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 101, மகேஷ் 103 ரன்கள் எடுத்தனர். மத்திய பிரதேச தரப்பில் இஷ் பாண்டே, புனீத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய மத்திய பிரதேசம் 102.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹர்பிரீத் சிங் அதிகபட்சமாக 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக தரப்பில் விக்னேஷ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
 290 ரன்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய தமிழகம் 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வர, போட்டி டிரா ஆனது. அபராஜித் 30, அபினவ் முகுந்த் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com