இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் தனது முதல் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணியிடம் கண்ட தோல்வியில் இருந்து மீண்டுள்ளது சென்னை அணி. அதேவேலையில், ஜாம்ஷெட்பூருடனான முதல் ஆட்டத்தை கோல் இன்றி சமன் செய்திருந்த நார்த்ஈஸ்ட் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
முன்னதாக, சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு சென்னை-நார்த்ஈஸ்ட் அணிகள் மோதின. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை வீரர்கள் அப்துல் நெதியோதத் (11-ஆவது நிமிடம்), ரஃபேல் அகஸ்டோ (24-ஆவது நிமிடம்), முகமது ரஃபி (84-ஆவது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.
சென்னையின் தடுப்பாட்டத்தை தகர்க்க இயலாத நார்த்ஈஸ்ட் அணி, இறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.
இன்றைய ஆட்டம்
கேரளா பிளாஸ்டர் எஃப்சி-
ஜாம்ஷெட்பூர் எஃப்சி
இடம்: கொச்சி
நேரம்: இரவு 8 மணி
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.