சேலஞ்சர் டென்னிஸ் அரையிறுதியில் யூகி-சுமித் மோதல்

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி-சுமித் நாகல் அரையிறுதியில் மோதுகின்றனர்.
சேலஞ்சர் டென்னிஸ் அரையிறுதியில் யூகி-சுமித் மோதல்

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி-சுமித் நாகல் அரையிறுதியில் மோதுகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்லோவேனியாவின் பிளேஸ் காவ்சிச்சை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார் சுமித் நாகல். இதேபோல், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி சக நாட்டவரான பிரஜனேஷ் கன்னேஸ்வரனை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். 
இந்த மோதல் குறித்து கேட்டபோது யூகி பாம்ப்ரி கூறுகையில், 'அரையிறுதியில் யாருடன் மோதுகிறேன் என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. முழு கவனமும் எனது ஆட்டத்தில் மட்டுமே இருக்கும்' என்றார்.
இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் சங் ஹுவா யாங் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ஆன்டணி எஸ்கோஃபியரை வீழ்த்தினார். மேலும் ஒரு காலிறுதியில் குரோஷியாவின் ஆன்டே பாவிச்சை 6-2, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பிரிட்டனின் ஜேய் கிளார்க், அரையிறுதியில் சங் ஹுவா யாங்கை எதிர்கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com