தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பரோடா பேட்டிங்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - பரோடா அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று தொடங்கியுள்ளது...
தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பரோடா பேட்டிங்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - பரோடா அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

'சி' பிரிவில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணிக்கான கடைசி குரூப் சுற்று இதுவாகும். தற்போதைய நிலையில் தமிழகம் 5 போட்டிகளில் கைப்பற்றிய 11 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது. இப்பிரிவில் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம், மும்பை அணிகள் அதைத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன. 

முந்தைய ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை வென்றிருக்க வேண்டிய தமிழகம், அந்த ஆட்டத்தை டிரா செய்தது. எனவே, தற்போது பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் வெல்லும் பட்சத்திலேயே தமிழகம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

தமிழக அணியில் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாகும். அவர்கள் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com